Posts

புரிந்துகொள்ள முடியா உறவுகள்

  கடந்த ரெண்டு மூணு பதிவ ஒரே கருத்துப்பேசி கொஞ்ச போர் அடிக்குது இன்னைக்கு ஒரு படத்தை பற்றி பேசுவோம். "நீ பொட்டு வச்ச... தங்கக்குடம்... ஊருக்கு நீ மகுடம்..." இந்த பாட்டு கேட்ட திரு. விஜயகாந்த் அவர்களோடு சேர்த்து இப்ப லப்பர் பந்து படமும்தான் நியாபகத்துக்கு வருது. அந்த படத்துல பேச நிறைய விசயம் இருக்கு எனக்கு ஒரு காட்சி மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியது, அந்த காட்சி பற்றிதான் இப்ப பேசப்போறோம். ஒருகட்டத்துல கெத்து மனைவி யசோதா கோவிச்சுகிட்டு அவங்க அம்மா வீட்டுக்கு போய்டுவாங்க. அவங்க சின்ன வயசுலயே கெத்தை காதல் திருமணம் செய்திருப்பாங்க. படம் முழுக்க கெத்தை அவங்க திட்டும்போதெல்லாம் கெத்து அம்மா மகனுக்குத்தான் ஆதரவ பேசுவாங்க, கூடவே மருமகளை ஜாடை பேசவும் செய்வாங்க. வழக்கமான மாமியார் மருமகள் உறவு. ஆனா அவங்க பிரிஞ்சு போனப்புறம் யசோதவை தேடி அவங்க மாமியார் அவங்க வீட்டுக்கு போவாங்க. பதினேழு வருஷம் தான் நான் என்னோட மகனை வளர்த்தேன், அதுக்கப்புறம் இருவத்திரண்டு வருசமா நீதான் அவன வளர்த்துன,ஏன் என்னையும் கூட நீதான் வளர்த்தது. ஒரு பொண்டாட்டி புருஷன் கிட்ட கோவிச்சுகிட்டு இருக்கலாம், ஆனா ஒரு...

உன்னில் தொடங்கும் உலகம்

முந்தைய பதிவில் பெண்கள் அவங்களோட உடல்நலம் , மனநலம் பாதுகாப்பது பற்றி பேசினோம் . அதுல இன்னும் கொஞ்சம் ஆழமாக   சென்று பார்ப்போம் . பெண்களுக்கு வரும் எல்லா பிரச்சனைகளுக்கும் ஆண்களை காரணம் சொல்லும் வழக்கம் உண்டு . அது உண்மையா ? அனைத்திற்கும் காரணம் ஆண்களா ? அது பாதி உண்மைதான் .   " தீதும் நன்றும் பிறர் தர வாரா " இந்த பழமொழியை பல இடங்களில் நம்ம கேட்டிருப்போம் . நமக்கு நடப்பவைகளுக்கு முழு முதல் காரணம் நாம் தான் . பெண்களுக்கும் அப்படித்தான் நிறைய தேவையற்ற பிரச்சனைகளை நாம் தான் இழுத்து கொள்கிறோம் . ஆனா இந்த பதிவுல நம்ப பிரச்சனைகள் பற்றி பேசப்போவது இல்லை , நமக்கு நம்ம செய்யக்கூடிய மூன்று முக்கிய நன்மைகளை பற்றி பேசப்போறோம் . உன்னை நேசி : எவ்வளோ பேருக்கு உங்கள உங்களுக்கு பிடிக்கும் . எந்த ஒப்பீடும் இல்லாமல் இருக்குறது இருக்குற மாதிரி உண்மையான உங்களை உங்களில் எத்தனை பேருக்கு பிடிக்கும் ? உங்களை நீங்களே பாராட்டிக்கிட்டது உண்டா ? எப்பவும் மத்தவங்க நம்மை பாராட்டனும் , அங்கீகரிக்கனுனு தான் எதிர்பாக்க...

சேமிப்பது நல்லதல்ல-Savings is not good

  தலைப்பை பார்த்தயுடன் என்னடா இப்படி சொல்றாங்கனு தோணுதா ? ஆமாங்க எல்லா விசயத்திலும் சேமிப்பு நல்லதல்ல , முக்கியம்ம நம்ப பாரத நாட்டு பெண்கள் மனசுல சேர்த்துவெக்குற , வெளிக்காட்ட தயங்குற   உணர்வுகள் நல்லதல்ல . சமீபத்துல ஒரு புத்தகம் படிச்சேன் அதுல வந்த ஒரு வரி தான் இதை நான் எழுதுவதற்கான காரணம் . “What comes out of you doesn’t make you sick, what stays in there does.” (The Gift: 12 Lessons to Save Your Life-Book by Edith Eger) நமக்குள் இருப்பதுதான் நம்மை நோய்வாய் படச்செய்யும் , நம்மை காயப்படுத்தும் , வெளியில வந்துட்ட அதுனால உங்களை எதுவும் செய்யமுடியாது . கொஞ்ச நாளுக்கு முன்னாடி புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு சென்றிருந்தேன் எனக்கு என்னவோ பார்க்கும்போது நிறைய பெண்கள்தான் இதுனால பாதிக்கப்படுற மாதிரி தோணுச்சு . என்னோட குடும்பத்திலையே  அந்த நிலைதான் . ஏன் பெண்கள் ? எப்படி பெண்கள் ? நம்ம நாட்டுல பெண்கள் குடிப்பதும் . புகைபிடிப்பதும் இளைய தலைமுறைக்கு பழகியிருக்கலாம் . நாற்பது , ஐம்பது வயதுக்கு மேல இருக்க நம...

தோல்வியின் கதை-The Journey Through Failure

நம்ம எல்லாரும் எப்பவும் ஒருவரோடு வெற்றி கதையை கேட்டுத்தான் நம்மளும் இப்படி இருக்கனும் ஜெயிக்கனுனு ஆசைப்படுவோம். வெற்றியாளர்களோட பழக்கங்கள், அவங்க பயன்படுத்திய உத்திகள்னு எல்லாமே முயற்சி செய்வோம். ஆனா உண்மையிலேயே வெற்றிக்கு நல்ல குரு தோல்விதான். நம்மள சுத்தி நம்ம பக்கத்துல ஏதோ ஒரு முயற்சி செய்து தோற்று போனவங்கள நம்ம ஒருபொருட்ட நினைக்கவே மாட்டோம். சில நேரங்களில் நமக்கான பாடம் அவங்ககிட்டதன் இருக்கும். நீங்க எல்லாரும் ஜிகர்தண்டா படம் பார்த்திருக்கீங்களா??? அதுல ஒரு காட்சி வரும், கதாநாயகன் சித்தார்த் வில்லன் பாபி சிம்ஹாவை வைத்துதான் படம் எடுக்கனுனு ஒரு இக்கட்டுல மாட்டிப்பாரு. என்ன செய்றதுனு தெரியாம நடுராத்திரி ஒரு கடை வாசலில் உக்காந்திருப்பாரு, விடியகாலை பெட்டிக்கடை பழனி தாத்தா வருவாரு, அந்த படம் முழுக்க எல்லாருக்கும் குருவம்மானு கதை சொல்லி அலறவிடுவாரு. அவரு அங்க சித்தார்த்த பார்த்ததும் நிலைமை புரிஞ்சு அவரோட தோல்வியின் கதையை சொல்வார். பல ஆண்டுகளுக்கு முன்னாடி இயக்குனர் ஆகனுன்னு வந்தது அன்னைக்கு இருந்த மனநிலையில வாய்ப்புகள் ஒன்னு போன இன்னொன்னு வருனு தயாரிப்பாளர் கூட சண்டைபோட்டது அதுக்கப்...

நம்மில் ஒரு குரல்- A Voice Within Us

அனைவரையும் நம்மில் ஒரு குரல் பக்கத்திற்கு வரவேற்கிறேன் . இன்னைக்கு இருக்க இந்த அதிவேக உலகத்துல நம்மை சுற்றி இருக்க சத்தங்களும் , இரைச்சல்களும் நமக்குள் இருக்கும் நம்முடைய குரலை கேக்கவிடாம செஞ்சுடுது . பழைய சினிமாவுல எல்லாம் பார்த்திருப்பீங்களே மனசாட்சினு அவங்கள மாதிரியே இன்னொரு உருவம் அவங்க முன்னாடி வந்து பேசும் " டேய் , தப்பு பண்ற வேண்டாம் ", " அவகிட்ட தைரியமா போய் சொல்லு ", இந்த மாதிரி அட்வைஸ் எல்லாம் கொடுக்கும் . அது வெறும் சினிமாக்குனு காட்டப்பட்டது இல்லை . நம்ம எல்லார்குள்ளேயும் அப்படி ஒரு குரல் நம்முடைய குரல் இருக்கு . ஒரு அழகிய காலைப்பொழுதின் இனிமையில் , இல்ல இரவின் அமைதியில் நம்மை சுற்றி இருக்கும் எல்லா சத்தங்களையும் ஒதுக்கீட்டு அமைதியாக கேட்ட அந்த குரல் நம்மோடு பேசும் . இதை ஆங்கிலத்துல Gut பீலிங் , உள்ளுணர்வுனு (intuition) சொல்றாங்க . நம்முடைய உள்ளுணர்வுதான் பலநேரங்களில் நம்மை வழிநடத்தும் , வழித்துணையாவும் இருக்கும் . வாங்க நமக்குள் ஒலிக்கும் குரலை கேட்க தொடங்குவோம் . (In toda...